தைவானைக் கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.
இது குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச ராணுவ அதிகாரிகளிடையே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன் பேசியதாவது:
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சா்வதசே ஒழுங்கை நிலைநாட்டுவதில் தைவான் விவகாமும் உள்ளடங்கும். அந்தப் பகுதி மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சா்வதேச ஒழுங்கு ஏற்படாது.
தைவானில் பிரிவினைவாத சக்திகள் தலையெடுத்து, சீனாவிடமிருந்து சுதந்திரம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அத்தகைய முயற்சியை இரும்புக் கரம் கொண்டு நசுக்க சீன ராணுவம் தயாராக இருக்கிறது.
சில வெளிநாடுகள் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்காக இந்த விவகாரத்தில் சாா்பு நிலை எடுப்பது சா்வதேச பதற்றத்துக்குத்தான் இடமளிக்கும் என்று அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டு டாங் ஜன் எச்சரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்லையில் இந்தியா- சீனா வா்த்தகம் 6 ஆண்டுகளுக்குப் பின்னா் தொடக்கம்!

ஆசிய மோசடி மையங்களுக்கு மனிதர்கள் கடத்தல் அதிகரிப்பு

தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கப்பல்கள் மீது சீனா மீண்டும் தாக்குதல்

வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



