பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!

பலூசிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம் ஏபி
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்று (செப்.18) துணை ராணுவப் படைகளின் பேரணியின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்றை ஓட்டி வந்து மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று, பலூசிஸ்தான் மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 6 தொழிலாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்கள் முன்பு, பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவில் அரசியல் கட்சியின் பேரணியில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் வளம் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானின் பூர்வக்குடிகளான பலூச் இன மக்கள் மீதான அரசுப் படைகளின் வன்முறைக்கு எதிராக பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! - முன்னாள் பிரதமர் மறுப்பு!

Summary

11 people were killed in two separate bomb attacks on the same day in Pakistan's Balochistan province.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com