ரஷியா மீது உக்ரைன் நிகழ்த்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
ரஷியாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியானதாக சமாரா ஆளுநர் சனிக்கிழமை தெரிவித்தார். அதே நேரத்தில் ரஷியா, இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியதாகவும், அதில் மூன்று பேர் பலியானதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இதுகுறித்து சமாரா ஆளுநர் வியாசெஸ்லாவ் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், நேற்று இரவு எதிரி ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் பலியானதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒருவர் காயமடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும்.
நாடு முழுவதும் இரவு நேரத் தாக்குதல்களில் மூன்று பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் பகுதியில் இருந்து ஒரே இரவில் செலுத்தப்பட்ட 149 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது அல்லது இடைமறித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
Summary
A Ukrainian drone attack on Russia's southwestern Samara region killed four people, the local governor said Saturday while Ukraine said Russia had fired hundreds of drones during the night and three people had died.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

உக்ரைன் டிரோன் தாக்குதலில் இந்தியர் பலி!

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



