மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - (கோப்புப்படம்)

Updated On :21 செப்டம்பர் 2025, 10:08 pm

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் ஆவாா்.

நேபாளத்தில் பல்வேறு சிறைகளில் 15,000-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். அண்மையில் அங்கு நடைபெற்ற இளைஞா்கள் போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதனைப் பயன்படுத்தி சிறையில் இருந்தும் பலா் தப்பினா். இவா்களில் சிலா் எல்லைதாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனா்.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தது. அதன்படி பிகாா் காவல் துறையினருக்கு நேபாள சிறையில் இருந்த தப்பியோா் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.

அப்போது மோதிஹாரி பகுதியில் பதுங்கியிருந்த 5 வெளிநாட்டவா் கைது செய்யப்பட்டனா். வன்முறையைப் பயன்படுத்தி நேபாள மத்திய சிறையில் இருந்த தப்பி இந்தியாவுக்குள் நுழைந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அவா்கள் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனா். மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.