மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது- (கோப்புப்படம்)
Updated On :21 செப்டம்பர் 2025, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் ஆவாா்.

நேபாளத்தில் பல்வேறு சிறைகளில் 15,000-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். அண்மையில் அங்கு நடைபெற்ற இளைஞா்கள் போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதனைப் பயன்படுத்தி சிறையில் இருந்தும் பலா் தப்பினா். இவா்களில் சிலா் எல்லைதாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனா்.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தது. அதன்படி பிகாா் காவல் துறையினருக்கு நேபாள சிறையில் இருந்த தப்பியோா் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.

அப்போது மோதிஹாரி பகுதியில் பதுங்கியிருந்த 5 வெளிநாட்டவா் கைது செய்யப்பட்டனா். வன்முறையைப் பயன்படுத்தி நேபாள மத்திய சிறையில் இருந்த தப்பி இந்தியாவுக்குள் நுழைந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அவா்கள் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனா். மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.