/
துருக்கியின் வா்த்தக மையமான இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினா்.
அதிநவீன துப்பாக்கிகளுடன் வந்த 3 போ் கொண்ட கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட்டனா்.
சுமாா் 10 நிமிடங்கள் நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்த நிலையில் பிடிபட்டனா். இந்த மோதலில் 2 போலீஸாரும் லேசான காயமடைந்தனா்.
சம்பவ நேரத்தில் தூதரகத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஸா போா் தொடங்கியதைத் தொடா்ந்து நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் ஏற்கெனவே துருக்கியை விட்டு வெளியேறிவிட்டனா்.
தொடர்புடையது
பில்லிங் தொடா்பான தகராறில் துப்பாக்கிச் சூடு: 2 போ் கைது

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! பாதுகாப்புகள் தீவிரம்!

ஹோண்டுராஸில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக்கொலை

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



