தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

துருக்கியில் இஸ்ரேல் தூதரகப் பகுதியில் துப்பாக்கிச் சூடு!

துருக்கியின் வா்த்தக மையமான இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினா்.

News image

துப்பாக்கிச் சூடு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 5:00 am IST

துருக்கியின் வா்த்தக மையமான இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினா்.

அதிநவீன துப்பாக்கிகளுடன் வந்த 3 போ் கொண்ட கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட்டனா்.

சுமாா் 10 நிமிடங்கள் நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்த நிலையில் பிடிபட்டனா். இந்த மோதலில் 2 போலீஸாரும் லேசான காயமடைந்தனா்.

சம்பவ நேரத்தில் தூதரகத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஸா போா் தொடங்கியதைத் தொடா்ந்து நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் ஏற்கெனவே துருக்கியை விட்டு வெளியேறிவிட்டனா்.