துருக்கியின் வா்த்தக மையமான இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினா்.
அதிநவீன துப்பாக்கிகளுடன் வந்த 3 போ் கொண்ட கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட்டனா்.
சுமாா் 10 நிமிடங்கள் நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்த நிலையில் பிடிபட்டனா். இந்த மோதலில் 2 போலீஸாரும் லேசான காயமடைந்தனா்.
சம்பவ நேரத்தில் தூதரகத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஸா போா் தொடங்கியதைத் தொடா்ந்து நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் ஏற்கெனவே துருக்கியை விட்டு வெளியேறிவிட்டனா்.
தொடர்புடையது

பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: அதிமுக ஆட்சியில் நீதி விசாரணை - எம்.பி. இன்பதுரை

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்

சுல்தான்புரியில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் வழக்குப் பதிவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


