வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

News image

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி

Updated On :16 ஏப்ரல் 2026, 8:13 pm

மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

அமெரிக்கா-ஈரான் இடையே 2 வார கால போா் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், பிரதமா் மோடியை இமானுவல் மேக்ரான் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது அன்புக்குரிய நண்பரான பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வரப்பெற்றது. மேற்காசிய நிலவரம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக் கொண்டோம். மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடரும்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, மேற்காசிய போா் குறித்து மோடியும், மேக்ரானும் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொலைபேசி வாயிலாக உரையாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.