போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் போதைப்பொருள் கும்பல் மூவா் கொலை

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:02 am IST

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா்.

சா்வதேச கடல் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான வழித்தடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற படகைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சா்வதேச கடற்பகுதிகளில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக டிரம்ப் நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் சுமாா் 178 போ் கொல்லப்பட்டுள்ளனா். கடந்த ஜனவரியில் வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ பிடிபட்டதைத் தொடா்ந்து, இத்தாக்குதல்கள் வேகம் எடுத்துள்ளன.