வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி திரட்ட, அவர்களின் திறமையான ஐடி ஊழியர்களை போலி அடையாளங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற பயன்படுத்துவதாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 10 நட்பு நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.
அதில், வட கொரிய ஐடி ஊழியர்கள் வருமானத்தைப் பெற இணையதளங்களில் பிற நாட்டுக் குடிமக்களைப் போன்று அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த வருமானத்தை தங்களது நாட்டு அரசுக்கு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வட கொரிய ஊழியர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டது.
வடகொரியா மீது சர்வதேச அளவில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் திட்டங்களுக்கு நிதி திரட்ட சைபர் குற்றங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் அந்நாடு பரவலாக ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு வடகொரியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்ட மறுப்புச் செய்தியில், “எங்கள் நாட்டின் மீதான பிம்பத்தைக் கெடுக்கும் தீய நோக்கத்துடன் வைக்கப்பட்ட வழக்கமான அரசியல் குற்றச்சாட்டு இது. இணைய வெளி தொடர்பான முக்கிய வளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, பிற நாடுகளிடம் இருந்து சைபர் அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறுவது மிகவும் முரணானது.
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது சட்டவிரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் சாக்குபோக்கு மட்டுமே இது” எனத் தெரிவித்துள்ளது.
Summary
Slander against North Korea: Condemnation of the US!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திணிக்கப்படும் போர்கள்
உலகம் யார் பக்கம்?

மேதாந்தாவுக்கு மாற்றப்படுவதற்கு முன் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் துன்புறுத்தல்: வாங்சுக் புகாா்

கனடா காட்டுத்தீயால் வட அமெரிக்க நகரங்களில் மோசமான காற்றின் தரம்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




