தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டால்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது. அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா்.
பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், 50,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகினாவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இப்புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை அதிகாலைக்குள் சீனாவின் கிழக்குக் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்காரணமாக, அந்நாட்டு அரசும் தீவிர வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதற்கு மத்தியில், புயலையொட்டி தைவான் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றமாறு சீனா அறிவுறுத்தியதற்கு தைவான் அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
Summary
Typhoon ‘Dolphin’ hits Japan
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஐடிஐ படித்தவர்களுக்கு ஜப்பானில் வேலை: அமைச்சர் பர்வேஸ் தகவல்!

டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் செயல்படும் வணிக வளாகக் கடைகளை காலி செய்ய உத்தரவு

சீனாவைத் தாக்கிய பாவி புயல்: 17 லட்சம் மக்கள் வெளியேற்றம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



