ஈரான் - அமெரிக்கா இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்பட நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பாகிஸ்தான் வெளிவிவகார செய்தித்தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி குறிப்பிடும்போது, “ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்தப் பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், அப்பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சகர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் சவூதி அரேபியா, கத்தார், எகிப்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் கலந்துகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷா தர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Pakistan on Tuesday said it has been invited to participate in the Iran-US talks aiming to reduce tension by arranging a deal between the two estranged nations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்
உலகிற்கு ஒரு நல்ல செய்தி! என்ன சொல்லப்போகிறது அமெரிக்கா?

ஈரான் - அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! - சீனா வலியுறுத்தல்!

இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




