கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலி குறித்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கராச்சி(பாகிஸ்தான்): கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் கராச்சியில் மேமன் கோத் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு பெண் காயமடைந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த பெண் அந்த பகுதி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வீட்டுவசதி சங்கத்திற்கு அருகிலுள்ள ஒரு புதர் பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல 9 மி.மீ புல்லட் குண்டுகள் மற்றும் காலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தில்லி காலனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, பிப்ரவரி 11 ஆம் தேதி ஸ்வாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட தகராறால் ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார், ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் மோதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Summary

At least four people died and five others injured in four separate firing incidents in different parts of Karachi on Wednesday night, police sources...

கோப்புப்படம்
இந்தியாவுடன் எஃப்டிஏ மிக முக்கிய சாதனை: பிரிட்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com