பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 13 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேலும நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாகாணத்தின் குஸ்தார் நகரத்திலிருந்து வடகிழக்கே 86 கிமீ தொலைவில் இருந்தது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக காலை 5.52 மணிக்கு குஸ்தாருக்கு தென்கிழக்கே 75 கிமீ தொலைவில் 33 கிமீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பலுசிஸ்தானில் உள்ள ஜால் மாக்சி, ஜாஃபராபாத் மற்றும் நசிராபாத் ஆகிய பகுதிகளிலும் சிந்து மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது.

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 74,000 க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A 5.6-magnitude earthquake struck Pakistan's Balochistan province on Friday, but no loss to life or property was reported.

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த சூழ்ச்சி! முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com