திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

News image

எல் மென்ச்சோ - AFP

Updated On :23 பிப்ரவரி 2026, 1:51 pm IST

சர்வதேச அளவில் தேடப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான எல் மென்ச்சோவை மெக்சிக்கோ ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, எல் மென்ச்சோவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மெக்சிகோவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள்களை சட்டவிரோதமாக கடத்தும் சட்டவிரோத அமைப்பை நடத்தி வந்த எல் மென்ச்சோ மீது சர்வதேச அளவில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

போதைப் பொருள் கடத்தல் மட்டுமின்றி கொலை, கொள்ளை, கடத்தல் எனப் பல்வேறு குற்றச்செயல்களில் எல் மென்ச்சோவின் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து போதைப் பொருள் கடத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். எல் மென்ச்சோவை கொலை செய்ய மெக்சிக்கோ அரசுக்கு நெருக்கடி கொடுத்தது மட்டுமின்றி, அவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 1.5 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாலிஸ்கோ மாகாணத்தில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தலை செய்துவந்த எல் மென்ச்சோவை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவத்தினர் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எல் மென்ச்சோ படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் எல் மென்ச்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் வாகனங்களுக்கு தீ வைப்பதுடன், கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வரும்வரை வன்முறை நடக்கும் பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மெக்சிக்கோவுக்கான இந்திய தூதரகமும், அந்நாட்டில் உள்ள இந்திய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Summary

Drug cartel leader shot dead in Mexico! Supporters turn violent!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.