நானும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”மற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து திரும்புவீர்கள். ஆனால், இந்த முறை நீங்கள் தேர்தலில் பங்கேற்க போகிறீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு விஜய்தான் வேட்பாளர். அதனால் உங்கள் வீட்டில் இருப்பவர்களின் வாக்கு, விசில் சின்னத்துக்குதான். அனைவருக்கும் தெரிந்ததால்தான் அவதூறு பரப்புகிறார்கள்.
என் மீது அவதூறு பரப்பினால் மக்கள் மீது பரப்புவது போன்று, எனக்கு அரசியல் தரவில்லை என்றால் மக்களுக்கு தெரியவில்லை என்று சொல்வது போன்று. என்ன அசிங்மாக பேசினால் மக்களை அசிங்கமா பேசுவது போன்று. எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்வது என அவர்களுக்கு தெரியவில்லை.
விஜய்யும் மக்களும் வேறுவேறு அல்ல. விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி, உடலும் உயிரும் மாதிரி. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. சென்சிட்டிவான செண்டிமெண்ட் அது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.