ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்.

Published On :

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் தொழுகையின் போது ஒரு மசூதியில் நுழைந்து மூன்று சகோதரர்களைக் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் புதன்கிழமை கடத்திச் சென்றனர்.

அதில் இரண்டு காவலர்களை கொலைசெய்து அவர்களின் உடல்களை மார்வாட் கால்வாய் சாலையில் வீசிச் சென்றனர். அதே நேரத்தில் ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக இருந்த மூன்றாவது சகோதரர் கடத்தல்காரர்களின் காவலில் உள்ளார்.

மூன்றாவது கைதியை மீட்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் கூறுகையில், 10 முதல் 12 ஆயுதம் ஏந்திய நபர்கள் மசூதிக்குள் நுழைந்து, பிணைக் கைதிகளாக 3 பேரைப் பிடித்து, தப்பிச் சென்றதாகக் கூறினர்.

இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.