இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பாகிஸ்தான்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:28 pm IST

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் தொழுகையின் போது ஒரு மசூதியில் நுழைந்து மூன்று சகோதரர்களைக் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் புதன்கிழமை கடத்திச் சென்றனர்.

அதில் இரண்டு காவலர்களை கொலைசெய்து அவர்களின் உடல்களை மார்வாட் கால்வாய் சாலையில் வீசிச் சென்றனர். அதே நேரத்தில் ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக இருந்த மூன்றாவது சகோதரர் கடத்தல்காரர்களின் காவலில் உள்ளார்.

மூன்றாவது கைதியை மீட்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் கூறுகையில், 10 முதல் 12 ஆயுதம் ஏந்திய நபர்கள் மசூதிக்குள் நுழைந்து, பிணைக் கைதிகளாக 3 பேரைப் பிடித்து, தப்பிச் சென்றதாகக் கூறினர்.

இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.