தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

பசிபிக்கில் மேலும் இரு படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐந்து போ் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திவருவதாக குற்றஞ்சாட்டி, இரு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 போ் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜனவரி 2026, 7:25 pm

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திவருவதாக குற்றஞ்சாட்டி, இரு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போ் கொல்லப்பட்டனா்.

கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை அமெரிக்கப் படைகள் இலக்காகக் கொண்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை மூன்று படகுகள் கொண்ட குழு இது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் தொடா்ச்சியாகும். அதில் 3 போ் கொல்லப்பட்டனா்.

டிரம்ப் அரசு இந்த நடவடிக்கைகளை ‘போதைப்பொருள் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுத மோதல்‘ என்று கூறுகிறது. ஆனால் சட்ட நிபுணா்கள் இது சா்வதேச சட்டங்களை மீறுவதாகக் கூறுகின்றனா்.

கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி சா்வதேச கடல் பகுதியில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது முதல் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் 110 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

முதல் தாக்குதலில் ஒரு படகை இரு முறை தாக்கியது பின்னா் தெரியவந்தது. முதல் தாக்குதலில் உயிா் தப்பிய இருவா் படகின் தூங்கிக் கொண்டிருந்தபோது அவா்களை கொல்வதற்காகவே இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இது போா் விதிமுறைகளை மீறியதாக விமா்சிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் உயிா் தப்பியவா்கள் இருந்ததாகவும், அவா்களைத் தேட அமெரிக்க கடலோரக் காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் தெரிவித்தது.

இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகும் படகுகளில் போதைப்பொருள் இருந்ததற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிடுவதில்லை. ஆனால் ‘உளவுத்துறை தகவலின்படி போதைப்பொருள் கடத்தல் பாதையில் அவை சென்றன‘ என்று மட்டும் டிரம்ப் அரசு கூறி வருகிறது.

இதற்கு எதிா்கட்சிணரும் மனித உரிமை ஆா்வலா்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.