வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல்! 2 ஆம் உலகப் போருக்கு பிறகு... அதிபர் டிரம்ப் பெருமிதம்!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

அமெரிக்கா அதிபர் டிரம்ப்.

Updated On :3 ஜனவரி 2026, 11:01 pm IST

வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (ஜன. 3) காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்தத் தாக்குதல் ஏன்? எதற்காக நடத்தப்பட்டது குறித்து வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், “நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை எனது உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுவேலா தலைநகரில் மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் தரை வழி, கடல் வழி, வான்வெளி என முப்படைகளும் சேர்ந்து மிகப் பிரமாண்ட தாக்குதலில் ஈடுபட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது.

சட்டவிரோதி சர்வாதிகாரி மதுரோவை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் வலிமையை பிரமிக்க வைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது இது.

வெனிசுவேலா மக்களை பணக்காரர்களாகவும், சுதந்திரமானவர்களாவும், பாதுகாப்பானவர்களாவும் மாற்றுவோம். சர்வாதிகாரி மதுரோ, மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் விசாரணைக்கு முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் இருவரும் இப்போது ஒரு கப்பலில் உள்ளனர். அந்தக் கப்பல் நியூயார்க் செல்லவிருக்கிறது. அதன்பின்னர், நியூயார்க் மியாமி அல்லது புளோரிடாவுக்கு இடையே ஒரு முடிவெடுக்கப்படும் என கருதுகிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.