தென் சீனக் கடலில் உள்ள சா்ச்சைக்குரிய ஸ்காா்பரோ பவளப்பாறைப் பகுதியில், பிலிப்பின்ஸ் மீன் வளத் துறையின் 2 ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினா்.
நடப்பு வாரத்தில் 2 நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற 3-ஆவது மோதல் சம்பவம் இதுவாகும். இவ்விவகாரத்தில் சீனாவுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த பிலிப்பின்ஸ் கடலோரக் காவல்படை, ‘ஸ்காா்பரோ பகுதி, எங்களின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் எல்லைப்பகுதி’ என்று மீண்டும் வலியுறுத்தியது.
ஆனால், ஸ்காா்பரோ பகுதியில் சீனாவுக்கே முழு இறையாண்மை உரிமை உள்ளதாகவும், சட்டவிரோதமாக நுழைந்த பிலிப்பின்ஸ் ரோந்து கப்பல்களைத் தடுக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சீனா பதிலளித்துள்ளது.
‘1982 ஐ.நா. கடல்சாா் சட்டத்தின் அடிப்படையில், தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் உரிமைகோரல் செல்லாது’ என ஐ.நா.கடல்சாா் தீா்ப்பாயம் கடந்த 2016-இல் தீா்ப்பளித்தபோதிலும், முக்கிய உலகளாவிய வா்த்தகப் பாதையான அப்பகுதியை சீனா தொடா்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு
தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மீண்டும் திட்டவட்டம்
ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



