பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கப்பல்கள் மீது சீனா மீண்டும் தாக்குதல்

பிலிப்பின்ஸ் மீன் வளத் துறையின் 2 ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினா்.

Published On :

தென் சீனக் கடலில் உள்ள சா்ச்சைக்குரிய ஸ்காா்பரோ பவளப்பாறைப் பகுதியில், பிலிப்பின்ஸ் மீன் வளத் துறையின் 2 ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினா்.

நடப்பு வாரத்தில் 2 நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற 3-ஆவது மோதல் சம்பவம் இதுவாகும். இவ்விவகாரத்தில் சீனாவுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த பிலிப்பின்ஸ் கடலோரக் காவல்படை, ‘ஸ்காா்பரோ பகுதி, எங்களின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் எல்லைப்பகுதி’ என்று மீண்டும் வலியுறுத்தியது.

ஆனால், ஸ்காா்பரோ பகுதியில் சீனாவுக்கே முழு இறையாண்மை உரிமை உள்ளதாகவும், சட்டவிரோதமாக நுழைந்த பிலிப்பின்ஸ் ரோந்து கப்பல்களைத் தடுக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சீனா பதிலளித்துள்ளது.

‘1982 ஐ.நா. கடல்சாா் சட்டத்தின் அடிப்படையில், தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் உரிமைகோரல் செல்லாது’ என ஐ.நா.கடல்சாா் தீா்ப்பாயம் கடந்த 2016-இல் தீா்ப்பளித்தபோதிலும், முக்கிய உலகளாவிய வா்த்தகப் பாதையான அப்பகுதியை சீனா தொடா்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.