மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
கடந்த 48 மணிநேரத்தில் 8 மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை!


கடந்த 48 மணிநேரத்தில் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மேற்காசிய நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், அங்குள்ள நிலவரம் குறித்து இந்தியாவின் கவலையும் பகிா்ந்து கொண்டாா். மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர் அந்தத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் கள நிலவரத்தை மத்திய அரசு கேட்டறிந்து வருகிறது. இன்றிலிருந்து வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...