தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வளைகுடா போர்! ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது!

ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து...

10 Foreign Spies Arrested in Iran

ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது - (கோப்புப் படம்)

Published On :17 மார்ச் 2026, 12:38 pm IST

ஈரானில், 10 வெளிநாட்டு உளவாளிகளைக் கைது செய்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப். 28 முதல் ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், தூதரகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 10 உளவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் புலனாய்வுப் பிரிவு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் ஈரானின் முக்கிய பொருளாதரக் கட்டமைப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்ததாகவும், மீதமுள்ளவர்கள் மன்னராட்சியை ஆதரிக்கும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஈரான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட உளவாளிகள் 10 பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி, உள்பட அந்நாட்டின் ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரின் கொலைகளில் இஸ்ரேலிய உளவாளிகள் அளித்த தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஈரானில் கைது செய்யப்படும் உளவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை எதிர்த்து சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran's Revolutionary Guards have announced the arrest of 10 foreign spies in Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.