இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்பிடம் பகிர்ந்ததாக, கௌரௌஷ் கெய்வானி எனும் நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரின்போது கௌரௌஷ் கெய்வானி சிக்கியதாகவும், அவர் 6 ஐரோப்பிய நாடுகளில் உளவாளிக்கான பயிற்சிகளைப் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கௌரௌஷ் கெய்வானியின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஈரானின் அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
An Israeli spy has reportedly been executed in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்!
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

சவப்பெட்டிகளில் டிரம்ப் குடும்பத்தினர்: ஈரானில் வைக்கப்பட்டுள்ள பேனர்!

அமெரிக்கா உடன் நீடிக்கும் போர்! ஈரானில் இறுதித் தேர்வுகள் ரத்து!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



