பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம்: ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் அப்துல் நாசர் ஜமால் அல்ஷாலி தெரிவித்தது குறித்து...

News image

அப்துல் நாசர் ஜமால் அல்ஷாலி - ANI

Updated On :22 மார்ச் 2026, 1:30 pm IST

இக்கட்டான போர்ச் சூழலில் முதலில் துணைநின்ற இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல் நாசர் ஜமால் அல்ஷாலி தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப். 28 முதல் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இரு தரப்பும் பதில் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களும் பெரிதளவுல் பாதிப்படைகின்றனர்.

இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரகத் தூதர் அப்துல் நாசர் ஜமால் அல்ஷாலி கூறுகையில் “மேற்கு ஆசியாவில் ஈரான் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும், வளைகுடா நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பே தனது முன்னுரிமை; அவர்கள் பாதுகாக்கப்பட்டு குடும்பத்தினரைப் போல நடத்தப்படுகிறார்கள்.

வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா முன்மொழிந்ததை வரவேற்கிறேன். இந்த இக்கட்டான போர்ச் சூழலில் முதலில் எங்களுடன் நின்றவர்களில் இந்தியாவும் ஒன்று என்பதை ஐக்கிய அரபு அமீரகம் எப்போதும் நினைவில் கொள்ளும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்நாட்டில் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் 200 நாடுகளைச் சேர்ந்தவர்களைப் போலவே, இந்தியர்களும் பாதுகாக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களைப் போலவே நடத்தப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

Summary

UAE Ambassador Abdulnasser Alshali has said that the safety of Indians is a priority.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.