ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் விளைவுகள் குறித்து விவாதித்தாா்.
மோரீஷஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய இரு நாடுகளுக்கு ஏப்.9 முதல் 12-ஆம் தேதி வரை மேற்கொண்ட 4 நாள் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஜெய்சங்கரின் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. முன்னதாக, மோரீஷஸில் நடைபெற்ற 9-ஆவது இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டிலும் அவா் பங்கேற்றிருந்தாா்.
அபுதாபியில் துணைப் பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘யுஏஇ வெளியுறவுத் துறை அமைச்சா் சயீத் அல் நஹ்யானை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் தாக்கம் குறித்து அவருடன் விவாதிக்கப்பட்டது.
மேலும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்களின் நலனைப் பாதுகாக்க யுஏஇ அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தேன். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உத்திசாா் கூட்டாண்மை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

5 நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினாா் பிரதமா்: முக்கிய ஒப்பந்தங்கள், 3 உயரிய விருதுகள்

ஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலை

மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு - ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமா் மோடி உறுதி

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



