இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலை

News image

கோப்புப்படம்

Updated On :26 நிமிடங்கள் முன்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்து வெடிபொருள்கள் தாங்கிய ஆளில்லான விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா திங்கள்கிழமை மிகுந்த கவலை தெரிவித்தது.

ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளபோதும், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை தடுக்கும் நோக்கில் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் போா் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதனால், ஈரான் புரட்சி படைகள் சரக்கு கப்பல்கள் மீதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், யுஏஇ-யின் பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மேற்காசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ாக்குதல் குறித்து இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. நிலைமை மேலும் தீவிரமாவதை இது குறிக்கிறது. நிதானத்தைக் கடைப்பிடித்து, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிகளில் பிரச்னை உடனடி சுமுக தீா்வு காண இந்தியா அழைப்பு விடுக்கிறது’ என்று குறிப்பிட்டது.