சூடானில் கடந்த வாரம் மருத்துவமனை மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டுப் போரால் பதற்றம் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான பாராமிலிட்டரி படைக்கும் ஏற்பட்ட அதிகாரப் போர் நாட்டின் சூழலை மோசமாக்கியது.
இரு படைகளும் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறித் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூடானின் தர்ஃபூர் நகரில் கடந்த வாரம் அல் தீன் பயிற்சி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டதாகவும் 89 பேர் படுகாயமடைந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராணுவப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ராணுவப் படையினர் இந்தப் புகாரை மறுத்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் அருகிலிருந்த காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட நிலையில் தவறி மருத்துவமனை மீது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பொதுவெளியில் அதிகாரிகள் பேச அங்கு அனுமதி இல்லாத காரணத்தால் அதிகாரிகள் தங்களின் அடையாளத்தை மறைத்துப் பேசினர்.
சூடானில் உள்நாட்டுப் போரின் காரணமாக இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், உண்மையான எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகமானது என சூடானில் உள்ள நிவாரணக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மருத்துவமனைகள் மீது மட்டும் நடத்தப்பட்டத் தாக்குதல்களில் இதுவரை 2,000 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.
உலக சுகாதார நிறுவன நிர்வாக இயக்குநர் கெப்ரேயஸ் கூறுகையில், “போதுமான இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. போதுமான துயரங்கள் இழைக்கப்பட்டுள்ளன. சூடானில் மோதலை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
Summary
Strike on a hospital in Sudan killed at least 64 people
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

கை கழுவலாகாது!

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

சூடானில் மருத்துவமனை மீது துணை ராணுவப் படை தாக்குதல்! 10 பேர் பலி!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு


