லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்! போர் விமானத்தை விரட்டிய ஹிஸ்புல்லா?
லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் குறித்து...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் (கோப்புப் படம்)
AP

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் (கோப்புப் படம்)
AP
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு மாகாணங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர்த் தொடங்கியது.
வளைகுடா நாடுகளில் நிலவிய பதற்றமான சூழலுக்கு இடையே ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
கடந்த மார்ச் 2 முதல் ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக லெபனானின் தெற்கு மாகாணங்கள் மற்றும் தலைநகர் பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
லெபனானின் மக்கள் குடியிருப்புகள் அதிகம் நிரம்பிய பகுதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், இதுவரை 1,039 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லெபனானில் இருந்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் போர் விமானம் குறிவைக்கப்பட்டதாகவும், இதன்மூலம், அந்த விமானம் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா படையினர் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...