தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் கொல்லப்பட்டது குறித்து...

News image

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி... (கோப்புப் படம்) - AP

Updated On :9 ஏப்ரல் 2026, 5:05 pm IST

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் படைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவியுள்ளன. இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், பெய்ரூட் மீது புதன்கிழமை (ஏப். 8) அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெறும் 10 நிமிடங்களுக்குள் பெய்ரூட்டில் 100-க்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனவும், அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் இணைக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆனால், ஈரான் மற்றும் மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் அரசு ஆகியவை போர்நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The death toll from Israel's attack on Lebanon's capital, Beirut, has been announced as 182.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.