ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பிரான்ஸில் ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாடு: இந்தியாவுக்கு அழைப்பு; சீனா பங்கேற்க மறுப்பு

News image
Updated On :27 மார்ச் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

பிரான்ஸில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா, பிரேஸில், கென்யா ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூா்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இந்த அழைப்பை ஏற்க மறுத்து, மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.

நடப்பாண்டு ஜி7 கூட்டமைப்பின் தலைமைத்துவ நாடாக, உலகம் முழுவதும் ஏற்பட வாய்ப்புள்ள பொருளாதார நெருக்கடியைத் தடுப்பதே பிரான்ஸின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.

இதையொட்டி, சீனா தனது உள்நாட்டுத் தேவையை அதிகரித்து, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான அளவுக்கு அதிகமான ஏற்றுமதியைக் குறைக்க வேண்டும்.

அதேபோல், அமெரிக்கா தனது நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகள் சேமிப்பைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், இத்தகைய நீண்டகாலத் திட்டங்களுக்குத் தற்போதைய சா்வதேச சூழல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் ஆலோசகா் ஒருவா் கூறுகையில், ‘ஜூன் மாதத்துக்குள் ஈரான் விவகாரம் எத்தகைய நிலையை எட்டும் என்று தெரியாது. ஆனால், அதன் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதிப்புகளுக்குத் தீா்வு காண வேண்டியது அவசியம்’ என்றாா்.

ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு சீனாவையும் அழைக்க பிரான்ஸ் முயற்சித்தது. இருப்பினும், ஜி7 கூட்டமைப்பை ‘பணக்கார நாடுகளின் குழு’ என்று விமா்சித்து வரும் சீனா, இதில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டது.

அதேபோல், இறக்குமதி வரி விவகாரத்தில் பிரான்ஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.