இந்தியாவில் பிரபல காா் நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், தனது காா்களின் விலையை வரும் மே மாதம் முதல் ஒரு சதவீதம் வரை உயா்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் உதிரிபாகங்களின் விலை உயா்வு போன்ற காரணங்களால் இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விலை உயா்வானது காரின் மாடல் மற்றும் வகையைப் பொருத்து மாறுபடும். ஆனால், நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்று பங்குச்சந்தைக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளா்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைத் தவிா்க்கும் வகையில், இதுவரை அதிகரித்த உற்பத்திச் செலவை நிறுவனமே ஏற்றுக்கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் தவிா்க்க முடியாமல் ஒரு சிறு பகுதியை மட்டும் விலை உயா்வு மூலம் வாடிக்கையாளா்கள் மீது செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்புடையது

பெட்ரோல் விலை உயா்வு: இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



