போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறந்த சமாதானத் தூதராக விரும்பும் டிரம்ப்!

உலகளவில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக சிறந்த சமாதானத் தூதராக விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்தது குறித்து...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 3:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

உலகளவில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக சிறந்த சமாதானத் தூதராக விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தியது.

இந்த நிலையில், போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் மூலம் ஈரான் சில நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அந்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அனுமதி அளிக்கப்பட்டாலும் வழக்கத்தைவிட குறைந்த அளவிலான கப்பல்களே ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்ப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரமான மியாமியில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முயற்சி என்னும் (FII) உச்சிமாநாட்டில் டிரம்ப் உரையாற்றினார். அதில், மேற்கு ஆசிய போர் குறித்து பேசுகையில், "ஈரானுடனான எல்லா ஒப்பந்தத்திலும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு நிபந்தனையாக உள்ளது. அதேவேளையில், எண்ணெய் ஏற்றுமதிக்கான கடல்வழிப் போக்குவரத்து மீட்டெடுக்கப்பட வேண்டும்.

நாங்கள் இப்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஈரான் அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

நான் இதுவரை 8 போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளேன்.முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்கா 250% வரி விதிக்கும் என்று கூறி அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தேன்” எனத் தெரிவித்தார்.

Summary

US President Donald Trump has said that he wants to be a great ambassador of peace because he has ended eight wars worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.