மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

இஸ்ரேல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...

டொனால்ட் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.

Published On :

இஸ்ரேலை மக்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்தையும் நிறுத்தியது.

முன்னதாக, அமெரிக்க மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல்-லெபனான் இடையேயான 10 நாள்கள் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் தற்காலிகமாக திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் வரை சரிந்தது. ஆனால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது கடல்வழி முற்றுகையைத் தொடர்ந்தது. இதையடுத்து, நீரிணையைத் திறப்பதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே ஈரான் தனது முடிவை மாற்றிக் கொண்டு நீரிணையை மீண்டும் மூடியுள்ளது. இதனால், தற்போது நீரிணையின் இருபுறமும் சுமாா் 20,000 மாலுமிகளுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் நடுக்கடலில் சிக்கித் தவிக்கின்றன.

ஈரானிடம் உள்ள 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைமாற்றுவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே இன்னும் இணக்கம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால், 2 வார கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் புதன்கிழமைக்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருதரப்புக்கும் இடையே நிலவும் இந்த முட்டுக்கட்டையை விலக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”மக்களுக்கு இஸ்ரேலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளது.

அவர்கள் துணிச்சலானவர்கள், தைரியமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் புத்திசாலிகள்.

மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய மற்றவர்களைப் போல இல்லாமல், இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது.

மேலும், எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை நன்றாக அறிந்துள்ளது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

U.S. President Donald Trump has stated that whether people like Israel or not, Israel is America's best ally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.