இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதலை நடத்துவோம்: டிரம்ப் மிரட்டல்!

ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - AP

Updated On :11 ஜூன் 2026, 7:40 pm IST

ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குத நடத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 8 அன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டுவீழ்த்தின.

பின்னர், ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், மோதல்கள் துவங்கிய 2 ஆவது நாளான இன்று (ஜூன் 11) பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத்சோசியல் சமூக வலைதளப் பதிவில், ”அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப்போகிறது. ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், விமான எதிர்ப்பு உள்பட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், தாக்குதல் திறனும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. வருங்காலத்தில் வெகு சீக்கிரமே வெனிசுலாவைப் போல ஈரானின் கார்க் தீவை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல, மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளை கைப்பற்றி எரிவாயு சந்தையை நாங்கள் கட்டுப்படுத்துவோம். வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே தற்போது அது நன்றாக வேலை செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மீண்டும் போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Summary

We will launch a heavy attack on Iran tonight: Trump threatens!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.