இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் மேற்காசியப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் சூழ்ந்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு ஈரான் தாக்குதலைத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானும் இஸ்ரேலும் போர்நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பதிவில், “இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடையே அறியாமை அல்லது முட்டாள்தனம் குறுக்கிடாத முறையில், இறுதிக்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, போர்நிறுத்தம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும். அனைத்து விஷயங்களும் விரைவாக நடந்து முடியும்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
Summary
US President Donald Trump has stated that efforts are being made for a ceasefire between Israel and Iran.
தொடர்புடையது
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துங்கள்: டொனால்ட் டிரம்ப்

நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!

சீனா சென்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




