போர் நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டே தாக்குதலுக்குத் திட்டமிடும் அமெரிக்கா: ஈரான்
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் பேசியது பற்றி...
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த ஈரான் குடியிருப்புகள்
AP
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த ஈரான் குடியிருப்புகள்
AP
அமெரிக்க அரசு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் ஈரானில் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஒரு மாதத்தை கடந்த நிலையில் கலிபாஃப் அமெரிக்காவின் தந்திரமான நடவடிக்கை பற்றி பேசியுள்ளார்.
உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குரவத்துக்கான கடல்வழியான கோர்முஸ் நீரிணை போரின் காரணமாக வெகு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று ஈரான் நாடாளுமன்றத்தில் பேசிய அவைத் தலைவர் முகமது பாகேர் கலீபாஃப், “நமது எதிரி பொதுவில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான செய்திகளை அனுப்பிக்கொண்டே தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருகின்றனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் இங்கு வந்தால் அவர்களை தீயிட்டுக் கொளுத்தி நிரந்தரமாக தண்டிப்பதற்கு நமது வீரர்கள் தயாராக உள்ளனர்” என்று அவர் பேசினார்.
மேலும், “நாம் மிகவும் நெருக்கடியான காலத்தில் மிகப்பெரிய உலகளாவியப் போரை எதிர்கொண்டுள்ள நிலையில் ஈரானியர்களான நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.
அமெரிக்காவைத் தண்டித்து ஈரானை தாக்கியதற்காக அவர்களை வருந்தச் செய்து நமது உரிமைகளை நிலைநாட்ட நாம் உறுதியாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...