அமெரிக்க அரசு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் ஈரானில் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஒரு மாதத்தை கடந்த நிலையில் கலிபாஃப் அமெரிக்காவின் தந்திரமான நடவடிக்கை பற்றி பேசியுள்ளார்.
உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குரவத்துக்கான கடல்வழியான கோர்முஸ் நீரிணை போரின் காரணமாக வெகு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று ஈரான் நாடாளுமன்றத்தில் பேசிய அவைத் தலைவர் முகமது பாகேர் கலீபாஃப், “நமது எதிரி பொதுவில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான செய்திகளை அனுப்பிக்கொண்டே தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருகின்றனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் இங்கு வந்தால் அவர்களை தீயிட்டுக் கொளுத்தி நிரந்தரமாக தண்டிப்பதற்கு நமது வீரர்கள் தயாராக உள்ளனர்” என்று அவர் பேசினார்.
மேலும், “நாம் மிகவும் நெருக்கடியான காலத்தில் மிகப்பெரிய உலகளாவியப் போரை எதிர்கொண்டுள்ள நிலையில் ஈரானியர்களான நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.
அமெரிக்காவைத் தண்டித்து ஈரானை தாக்கியதற்காக அவர்களை வருந்தச் செய்து நமது உரிமைகளை நிலைநாட்ட நாம் உறுதியாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
Iran parliament speaker says US plots ground attack despite diplomatic efforts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடன் போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டதா?

ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்கா

திடீரென ஈரான் சென்ற பாக். உள்துறை அமைச்சர்! அமெரிக்கா உடன் மீண்டும் அமைதிப்பேச்சு?

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


