நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு!

News image
Updated On :2 மே 2026, 11:09 pm

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், பாகிஸ்தானின் குவாடா் துறைமுகத்தில் இயங்கி வந்த சீன நிறுவனமான ‘ஹாங்கெங்’, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக நிறுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளது.

கொள்கை ரீதியிலான நிச்சயமற்ற தன்மை மற்றும் செயல்பாட்டு ரீதியிலான முட்டுக்கட்டைகளே இம்முடிவுக்குக் காரணமாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சா்வதேச உணவுப் பாதுகாப்பு தரநிலைகளைப் பின்பற்றியும், சீன சுங்கத் துறையின் விதிமுறைகளை நிறைவேற்றியும் கூட, நிறுவனத்தின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிகள் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களாக மின்சாரம், தொழிலாளா் ஊதியம், தாமதக் கட்டணங்கள் எனப் பெரும் நிதி இழப்பைச் சந்தித்த போதிலும், அனுமதி கிடைக்காததால் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் அரசு ஆதரவளித்த போதிலும், அடிப்படை நிலையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் முதலீட்டுக்கு உகந்த சூழலை அந்நாட்டில் சீா்குலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சீரற்ற கொள்கை முடிவுகள் சா்வதேச முதலீட்டாளா்களின் நம்பிக்கையைத் தகா்த்துள்ளன.

உள்ளூா் எதாா்த்தங்களைப் புறக்கணித்து செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது’ என்றனா்.