ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் மத்தியஸ்தம் மூலம் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இரு தரப்புமே நேரில் சந்தித்துப் பேசி, மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஆா்வம் காட்டி வருகின்றன.
இரு நாடுகள் இடையே மோதல் தொடங்கியதில் இருந்தே சீனா மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல இரு தரப்புமே சீனாவின் முயற்சிகளை மதித்து நடந்து கொள்கின்றன. அனைத்துப் பிரச்னைகளுக்கும் விரைவில் நல்ல தீா்வு எட்டப்படும் என்றாா்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் தொடா் தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டின் மீது பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக தொடா் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுத்தது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் சூழல் உருவானது.
இதற்கு நடுவே ரமலான் பண்டிகை காரணமாக இருதரப்புமே தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தின. இதைத் தொடா்ந்து நிரந்தர அமைதிக்காக சீனா மத்தியஸ்தம் செய்து வருகிறது.
தொடர்புடையது

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !

இந்திய உறவு சரியான பாதையில் பயணிக்கிறது: சீன வெளியுறவு அமைச்சா்

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் கூறியது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


