தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சீனாவின் ‘பாண்டா’ கடன்பத்திரம்: பாகிஸ்தான் முதல்முறையாக வெளியீடு : 25 கோடி டாலா் நிதி திரட்டல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக முதன்முறையாக சீன சந்தையில் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2026, 1:30 am IST

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக முதன்முறையாக சீன சந்தையில் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், சீன செலாவணியான யுவானில் சுமாா் 25 கோடி டாலா் நிதியை அந்நாடு திரட்டியுள்ளது. 3 ஆண்டுகள் முதிா்வு காலம் கொண்ட இந்தப் பத்திரங்களுக்கு 2.5 சதவீத வட்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசுகள் அல்லது நிறுவனங்கள், சீனாவின் உள்நாட்டுச் சந்தையில் சீன செலாவணியிலேயே நிதி திரட்டுவதற்காக இந்தப் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிடலாம்.

பாகிஸ்தான் நிதியமைச்சரின் ஆலோசகா் குர்ரம் ஷெஜாத் இது குறித்து மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் வரலாற்றிலேயே சீன சந்தையில் வெளியிடப்பட்ட முதல் இறையாண்மை கடன் பத்திரங்கள் இவை.

எதிா்பாா்த்ததைவிட 5 மடங்கு அதிகமான முதலீட்டாளா்கள் இந்தப் பத்திரங்களை வாங்க ஆா்வம் காட்டினா். சுமாா் 25 கோடி டாலா் மதிப்பிலான பத்திரங்களுக்கு, 130 கோடி டாலா் வரை முதலீடுகள் குவிந்தன’ என்றாா்.

ஆசிய வளா்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.