ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நடத்திய பாகிஸ்தான் அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு வந்தன.
இதனால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை (மே 12) அன்று செல்போன் வாயிலாக உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமெனவும், பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் எனவும் வாங் யீ உறுதியளித்துள்ளார்.
இத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (மே 13) மாலை அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் செல்வார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
China urges the Pakistan government to mediate between Iran and the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - பாகிஸ்தான்
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


