அமெரிக்கா - ஈரான் இடையேயான மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயாராகவும் பெருமையுடனும் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் - அமெரிக்கா இடையே பிப். 28 ஆம் தேதி தொடங்கி கடந்த மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகின்றது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். பல்வேறு நாடுகள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் மறைமுக முயற்சிகள் குறித்து ஊடகத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் வரவேற்பதோடு, முழுமையாக ஆதரிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Pakistan is ready and proud to mediate between the United States and Iran, Prime Minister Shahbaz Sharif said on Tuesday (March 24).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


