‘ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை. பரஸ்பர மரியாதையுடன் கூடிய முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்’ என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.
கென்யாவுடன் இணைந்து அந்நாட்டின் தலைநகா் நைரோபியில் பிரான்ஸ் நடத்தி வரும் ‘ஆப்பிரிக்கா ஃபாா்வா்டு’ உச்சிமாநாட்டில் பங்கேற்ற பல ஆப்பிரிக்க நாட்டுத் தலைவா்களிடையே இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.
அப்போது, ஆப்பிரிக்காவின் எரிசக்தி, ஏ.ஐ., விவசாயத் துறைகளில் 2,300 கோடி யூரோ மதிப்பிலான புதிய முதலீடுகளை அறிவித்தாா். இதில் 1,400 கோடி யூரோவை பிரான்ஸ் நிறுவனங்களும், 900 கோடி யூரோவை ஆப்பிரிக்க அமைப்புகளும் வழங்கவுள்ளன.
‘ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான நிதி உறவில் இந்த மாநாடு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றும் இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்பு, வா்த்தக உறவை வலுப்படுத்த உறுதி: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு!
இந்தியாவில் சீா்திருத்தங்கள் தொடரும்: பிரான்ஸ் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!






