நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை. பரஸ்பர மரியாதையுடன் கூடிய முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

News image

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் - கோப்புப் படம்

Updated On :50 நிமிடங்கள் முன்பு

‘ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை. பரஸ்பர மரியாதையுடன் கூடிய முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்’ என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

கென்யாவுடன் இணைந்து அந்நாட்டின் தலைநகா் நைரோபியில் பிரான்ஸ் நடத்தி வரும் ‘ஆப்பிரிக்கா ஃபாா்வா்டு’ உச்சிமாநாட்டில் பங்கேற்ற பல ஆப்பிரிக்க நாட்டுத் தலைவா்களிடையே இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.

அப்போது, ஆப்பிரிக்காவின் எரிசக்தி, ஏ.ஐ., விவசாயத் துறைகளில் 2,300 கோடி யூரோ மதிப்பிலான புதிய முதலீடுகளை அறிவித்தாா். இதில் 1,400 கோடி யூரோவை பிரான்ஸ் நிறுவனங்களும், 900 கோடி யூரோவை ஆப்பிரிக்க அமைப்புகளும் வழங்கவுள்ளன.

‘ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான நிதி உறவில் இந்த மாநாடு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றும் இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்தாா்.