தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்

ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - AFP

Updated On :51 நிமிடங்கள் முன்பு

அமெரிக்க நைஜீரியப் படைகளின் கூட்டு முயற்சியால் ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்ததாவது:

எனது வழிகாட்டுதலின்படி, அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப் படைகளும் இணைந்து உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதியைப் ஒழிப்பதற்காக, சிக்கலான ஒரு பணியைக் குறைபாடின்றி நிறைவேற்றின.

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலை தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் தலைமறைவாகலாம் என்று நினைத்தார். ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை உளவாளிகள் எங்களுக்குத் தொடர்ந்து தகவல் அளித்து வந்தனர். அது அவருக்குத் தெரியவில்லை.

அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ முடியாது. அவர் கொலை செய்யப்பட்டதால், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு நல்கிய நைஜீரிய அரசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

US President Donald Trump has stated that Abu-Bilal al-Minuqi, a second-tier commander of ISIS, was killed through a joint effort by American and Nigerian forces.