கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து!

அமெரிக்க விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து பற்றி...

air show

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து - AP

Published On :18 மே 2026, 11:24 am IST

அமெரிக்க விமான சாகச நிகழ்ச்சியில் இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவின் ஐடஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப் படைத் தளம் அருகே ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்' விமானக் கண்காட்சியின் இறுதி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அமெரிக்க கடற்படையின் இஏ 18-ஜி ரக இரண்டு போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டபோது, நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களில் இருந்த 4 விமானிகளும் பாராசூட் மூலம் வெளியேறியதால் உயிர்தப்பினர். 4 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானங்கள் கீழே விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விமான சாகச நிகழ்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, விமானப் படைத் தளம் மூடப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடைசியாக 2018-ல் நடைபெற்ற ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்' விமான சாசக நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் மிதவை விமானத்தின் விமானி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Two Fighter Jets Collide in the US!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.