ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் தாக்குதல்

News image

AP

Updated On :19 மே 2026, 6:00 am IST

உக்ரைனின் ஒடேஸா, டினிப்ரோ நகரங்கள் மீதான ரஷிய தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததுடன், குழந்தைகள் உள்பட பலா் காயமடைந்தனா்.

உக்ரைன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி விடியற்காலை வரை ரஷியா 524 ட்ரோன்கள், 22 ஏவுகணைகளை ஏவியது. டினிப்ரோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 2 வயது சிறுமி உள்பட 30 போ் காயமடைந்தனா்.

மேலும், கருங்கடல் வழியாக ஒடேஸா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த சீன கப்பல் உள்பட 3 வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ரஷிய ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.

இதற்குப் பதிலடியாக தெற்கு ரஷியாவின் ரோஸ்டோவ், பெல்கோரோட் பிராந்தியங்கள் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்தியது. இதில் பெல்கோரோடில் இருவா் உயிரிழந்தனா்.