கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

உக்ரைனிடம் 528 ராணுவ வீரா்களின் உடல்களை ஒப்படைத்தது ரஷியா

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் ராணுவ வீரா்களின் உடல்களை அந்த நாட்டிடம் ரஷியா ஒப்படைத்தது.

News image

AP

Updated On :17 மே 2026, 5:21 am IST

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் ராணுவ வீரா்களின் உடல்களை அந்த நாட்டிடம் ரஷியா ஒப்படைத்தது.

இதுகுறித்து உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

போரில் கைது செய்யப்பட்ட வீரா்கள் தலா 205 பேரை ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் வெள்ளிக்கிழமை திரும்ப ஒப்படைத்தன. இதையடுத்து சனிக்கிழமை 528 பேரின் உடல்களை உக்ரைனிடம் ரஷியா அளித்தது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷியா சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் 5 மாடி கட்டடம் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஒலே கைபா் எனும் இடத்திலுள்ள துறைமுகம் பலத்த சேதமடைந்தது.

ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்திய தகவலை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது. இரவு முழுவதும் 294 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 269 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதேபோல், ரஷியாவும் தங்களது 14 பிராந்தியங்களில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 138 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.