தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

உக்ரைன் டிரோன் தாக்குதலில் இந்தியர் பலி!

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியானார்.

News image

ரஷிய குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் பற்றி எரியும் வீடு. - AP

Updated On :19 மே 2026, 11:38 am IST

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியானார்.

ஒடிசாவின் காஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேயா (30). இவர், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

விடுமுறைக்காக இந்தியா வந்து தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த ரமேயா இரு மாதங்களுக்கு முன் மீண்டும் ரஷியா சென்றிருந்தார்.

இந்த நிலையில், பணியிடத்திலிருந்து இரவுப்பணி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது நேற்று (மே 18) காலை 5 மணியளவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரமேயா பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் பணிபுரிந்த தேஜேஷ்வர் ரெட்டி (22), கேத்ரபாசி ரெட்டி (35) ஆகியோர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

பலியான ரமேயாவின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பணிக்குச் செல்லும் முன் கடைசியாகத் தனது தாயுடன் ரமேயா பேசியதாகக் குறிப்பிட்ட அவரின் தந்தை, ரமேயா உடலை விரைவில் இந்தியா கொண்டு வர அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Summary

Indian Killed in Ukraine Drone Attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.