ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியானார்.
ஒடிசாவின் காஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேயா (30). இவர், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
விடுமுறைக்காக இந்தியா வந்து தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த ரமேயா இரு மாதங்களுக்கு முன் மீண்டும் ரஷியா சென்றிருந்தார்.
இந்த நிலையில், பணியிடத்திலிருந்து இரவுப்பணி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது நேற்று (மே 18) காலை 5 மணியளவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரமேயா பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் பணிபுரிந்த தேஜேஷ்வர் ரெட்டி (22), கேத்ரபாசி ரெட்டி (35) ஆகியோர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
பலியான ரமேயாவின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பணிக்குச் செல்லும் முன் கடைசியாகத் தனது தாயுடன் ரமேயா பேசியதாகக் குறிப்பிட்ட அவரின் தந்தை, ரமேயா உடலை விரைவில் இந்தியா கொண்டு வர அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Summary
Indian Killed in Ukraine Drone Attack
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










