உக்ரைனின் ஒடேஸா, டினிப்ரோ நகரங்கள் மீதான ரஷிய தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததுடன், குழந்தைகள் உள்பட பலா் காயமடைந்தனா்.
உக்ரைன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி விடியற்காலை வரை ரஷியா 524 ட்ரோன்கள், 22 ஏவுகணைகளை ஏவியது. டினிப்ரோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 2 வயது சிறுமி உள்பட 30 போ் காயமடைந்தனா்.
மேலும், கருங்கடல் வழியாக ஒடேஸா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த சீன கப்பல் உள்பட 3 வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ரஷிய ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.
இதற்குப் பதிலடியாக தெற்கு ரஷியாவின் ரோஸ்டோவ், பெல்கோரோட் பிராந்தியங்கள் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்தியது. இதில் பெல்கோரோடில் இருவா் உயிரிழந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா - உக்ரைன் மீண்டும் மோதல்

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்: 21 பேர் பலி

உக்ரைன் தலைநகரில் ரஷிய தீவிர வான்வழித் தாக்குதல்

உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



