அவந்திகா வெட்ஸ் நட்ராஜ்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல மெகா சீரியல் தொடர் ‘பிரியமானவள்’. இத்தொடரில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் சிவரஞ்சனியை தொடரைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். இந்தத் தொடரைப் பொருத்தவரை இது சற்று வித்யாசமான கதாபாத்திரமே! ஏனெனில் அவந்திகாவாக வரும் சிவரஞ்சனி தொடரில் தன் கணவராக வரும் கதாபாத்திரத்தை வா, போ என ஒருமையில் தான் அழைப்பது வழக்கம். அதே சமயம் அவந்திகாவின் கணவராக வரும் நட்ராஜ் கதாபாத்திரம் மனைவி அவந்திகாவை வாங்க, போங்க என்று மிகுந்த மரியாதையுடன் அழைப்பதாக அந்தத் தொடரின் கதை அமைந்துள்ளது.
இப்போது சுவாரஸ்யம் என்னவென்றால் ரீல் ஜோடிகளாகச் சின்னத்திரையில் வழக்கமான கணவன், மனைவி சம்பாஷணைகளையே உல்ட்டாவாக மாற்றி கணவனைப் போல மனைவி ஒருமையிலும், மனைவியைப் போல கணவன் மரியாதைப் பன்மையிலும் உரையாடுவதாக இவ்விருவரும் இதுவரை அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இவ்விருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ரீல் வாழ்வில் மட்டுமல்லாது ரியல் வாழ்விலும் இணைந்திருக்கும் இந்த ஜோடி சின்னத்திரை உரையாடல் வழக்கத்தைத் தான் ரியல் வாழ்விலும் பிரதிபலிப்பார்களா என்று அவர்களது ரசிகர்களிடையே சுவாரஸ்யமான கேலி இழையோடிக் கொண்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்!
சிவாஜி பேரன் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் - எழில்!
சசிகுமார் நடித்துள்ள கொடிவீரன் படம் டிசம்பர் 7-ல் வெளியீடு!
நீயின்றி நானில்லை கண்ணம்மா: காதல் மனைவி சிநேகாவிடம் பிரசன்னா உருக்கம்!
பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாகசைதன்யாவுக்கு மாமியாராகப் போவது யார்? ரம்யா கிருஷ்ணனா? ஸ்ரீதேவியா?!