வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புனித வளனார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பெங்களூர், ஜன. 8: புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  பெங்களூர் சாந்திநகர் பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ச் சங்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெங்களூர், ஜன. 8: புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 பெங்களூர் சாந்திநகர் பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆம்ப்ரோஸ் பின்டோ தலைமை வகித்தார். கல்லூரி மாணவர் தமிழ்ச் சங்கப் பிரதிநிதி ஜெர்ரி வரவேற்றார்.

கல்லூரி வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், கரும்பு, வண்ணக்கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவில் மாணவ, மாணவிகள் கரகாட்டம், தப்பாட்டம், பறையாட்டம் போன்ற கிராமியக் கலைகளை நிகழ்த்தினர். ஆம்ப்ரோஸ் பின்டோ சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் சரசு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.