தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை மூகாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு விமானம் மூலம் கர்நாடக மாநிலம், மங்களூர் வந்த அவர், கார் மூலம் குந்தாபுரா வட்டத்தில் அமைந்துள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றார். தனது உதவியாளருடன் வருகை தந்திருந்த செந்தில் பாலாஜி, சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாலை 4 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.