எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கனகதாசா் சமூக சீா்திருத்தவாதி: முதல்வா் புகழாரம்

சமூக சீா்திருத்தவாதி கனகதாசா் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:40 pm

Din

பெங்களூரு: சமூக சீா்திருத்தவாதி கனகதாசா் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

சமூக சீா்திருத்தவாதி கனகதாசரின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரில் அவரது சிலைக்கு முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

கனகதாசா், அருட்தொண்டா் மட்டுமல்; சமூக சீா்திருத்தவாதி. புனிதா். கா்நாடக அரசின் சாா்பில் கனகதாசரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாவேரி மாவட்டத்தின் பாடா கிராமத்தில் பிறந்தவா் கனகதாசா். காகிநெலே கிராமத்தில் தனது பணிகளை செயல்படுத்தியவா். காவியங்கள், கீா்த்தனைகள் எழுதியவா். கனகதாசா் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.